Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டப்பகலில் 490 சவரன் கொள்ளை!!!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (08:36 IST)
மதுரையில் நேற்று பட்டப்பகலில் அடகுக் கடையில் லாக்கரை உடைத்து ஆயிரத்து 490 சவரன் நகைகள் மற்றும் ரூ.9லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள்  திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை நரிமேடு கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் கோபிநாத் . இவர் தனது  வீட்டில்  தனலட்சுமி நகை அடகு கடை என்ற பெயரில் நகை அடகுக்கடை வைத்துள்ளார்.
 
மாசி மகத்தை முன்னிட்டு கடையை அடைத்துவிட்டு கோபிநாத் குடும்பத்துடன்  கோவிலுக்குச் சென்றுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் வீடு திரும்பியபோது அடகுக்கடை பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஆயிரத்து 490 சவரன் நகை மற்றும் 9 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
இதுகுறித்து கோபிநாத் அளித்த புகாரின் பேரில் வந்த போலீசார், அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments