Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சென்னை மாநகராட்சி ஊழியர்.. போக்சோ சட்டத்தில் கைது;

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (15:19 IST)
பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சென்னை மாநகராட்சி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள பள்ளி மாணவி ஒருவர்  பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த மகிமை ராஜ் என்ற 48 வயது நபர் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் மகிமை ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மகிமை ராஜ் சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  
 
பள்ளி மாணவி குளிப்பதை 48 வயது நபர் ஒருவர் வீடியோ எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments