Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சென்னை மாநகராட்சி ஊழியர்.. போக்சோ சட்டத்தில் கைது;

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (15:19 IST)
பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சென்னை மாநகராட்சி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள பள்ளி மாணவி ஒருவர்  பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த மகிமை ராஜ் என்ற 48 வயது நபர் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் மகிமை ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மகிமை ராஜ் சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  
 
பள்ளி மாணவி குளிப்பதை 48 வயது நபர் ஒருவர் வீடியோ எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments