Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாவின் 46ஆவது ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (10:58 IST)
அண்ணாவின் 46 ஆவது ஆண்டு நினைவு நாள்ளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி அண்ணா சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
 
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா நினைவிடத்துக்கு திமுகவினர் மவுன ஊர்வலம் சென்றனர். காலை 8.30 மணிக்கு சேப்பாக்கத்தில் இருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டது.
 
இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் காரில் வந்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நடந்து சென்றனர்.
 
ஊர்வலம், அண்ணா நினைவிடத்தை வந்தடைந்ததும் கருணாநிதி அண்ணா சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அன்பழகன், மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், சற்குண பாண்டியன், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆ.ராசா ஒள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments