புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் 423 பேர் நேற்றிரவு சென்னை திரும்பினர். அவர்கள் அனைவரையும் தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் தீவுகளைச் சேர்ந்த 3,803 பேர் சென்னையில் இருந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர்.
ஹஜ் பயணம் நிறைவடைந்ததை அடுத்து அவர்களில் 423 பேர் நேற்றிரவு சென்னை திரும்பினர். அவர்களை மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜான், ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.