சென்னையில் ரூ:6 லடசம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த செல்வி(35), தலைமுடிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி சுத்தம் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்கிறார். கடந்த 9ஆம் தேதி ஆட்டோவில் முகம் அணிந்த 4 மர்ம நபர்கள் செல்வியிடம் இருந்த கத்தியை காட்டி அவரிடமிருந்து ரூ:6 லட்சம் மதிப்பிலான 40 கிலோ தலைமுடியை கொள்ளையடித்து சென்றனர்.
இதையடுத்து செல்வி காவல்துறையில் புகார் செய்தார். இதன்பேரில் காவல்துறையினர் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட்னர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளாயடிக்க திட்டமிட்ட கும்பலின் தலைவனும் முடி வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது. மேலும் ஒருவர் தலைமறைவாகி விட்டதால், அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.