Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாப மரணம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:39 IST)
ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாப மரணம்!
அவிநாசி அருகே இன்று அதிகாலை ஒரே பைக்கில் நான்கு இளைஞர்கள் சென்ற நிலையில் அந்த பைக் திடீரென விபத்துக்குள்ளாகி பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று அதிகாலை அவிநாசி அடுத்த ஈட்டிவீரம்பாளையம் பைபாஸ் சாலையில் ஒரே பைக்கில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த பைக் எதிர்பாராத விதமாக திடீரென மோதியது 
 
இதனை அடுத்து நான்கு பேர்களும் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியினர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்த நிலையில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் 4 பேரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் இருப்பதாகவும் படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments