Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரத்திற்குள் பேருந்துகள் செல்ல தடை – பேருந்து நிலையம் மாற்றம் !

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (15:08 IST)
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பை ஒட்டு மாமல்லபுரத்தில் பேருந்துகள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும், வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இரு நாட்டிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசுவதற்காக இருவரும் சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது. இதற்காக பல பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாக பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் பேருந்துகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார்கள், ஷேர் ஆட்டோக்களும் அடக்கம். இதற்காக கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments