Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரத்திற்குள் பேருந்துகள் செல்ல தடை – பேருந்து நிலையம் மாற்றம் !

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (15:08 IST)
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பை ஒட்டு மாமல்லபுரத்தில் பேருந்துகள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும், வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இரு நாட்டிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசுவதற்காக இருவரும் சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது. இதற்காக பல பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாக பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் பேருந்துகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார்கள், ஷேர் ஆட்டோக்களும் அடக்கம். இதற்காக கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments