Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபாச படம் ஏற்றிய வாலிபருக்கு 4 வாரம் சிறை; 5 ஆயிரம் அபராதம்

ஆபாச படம் ஏற்றிய வாலிபருக்கு 4 வாரம் சிறை; 5 ஆயிரம் அபராதம்
, வியாழன், 18 டிசம்பர் 2014 (19:31 IST)
யூ டியூப்பில் ஆபாச படம் பதிவேற்றம் செய்த வாலிபருக்கு 4 வாரம் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
அமெரிக்க தூதரக அதிகாரிகள், யூ டியூப்பில் தமிழகத்தை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்வதாக மத்திய புலனாய்வு பரிவு போலீசாருக்கு கடந்த 2012ம் ஆண்டு தகவல் தெரிவித்தனர்.
 
இதையடுத்து தமிழ்நாடு கணினி வழி குற்றப்பிரிவு போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், யுடியூப்பில் ஆபாச படம் பதிவேற்றம் செய்தது, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருண்பாபு என்பது தெரியவந்தது.
 
இதனை அடுத்து அருண்பாபு மீது சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், காவல் துறையினர் குற்றப்பத்ரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அருண்பாபுக்கு 4 வாரம் சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil