Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூட்டிய வீட்டினுள் அழுகிய நிலையில் 4 பெண்கள் உடல்கள் மீட்பு

பூட்டிய வீட்டினுள் அழுகிய நிலையில் 4 பெண்கள் உடல்கள் மீட்பு
, வெள்ளி, 24 ஜூன் 2016 (12:24 IST)
சென்னை ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் 4 பெண்கள் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




சென்னை ராயப்பேட்டை பழைய போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்து தெருவை சேர்ந்தவர் சின்ராஜ். இவர் மனைவி பாண்டியம்மாள் (38)., பரிமளா (18), பவித்ரா (18), சினேகா (16) ஆகிய 3 மகள்களுடன் வசித்துவந்தார். கடந்த சில தினக்களாக இவர்களது வீடு பூட்டியே இருந்தது. வீட்டின் உரிமையாளர் சீனிராஜிடம்  கேட்டபோது பதிலேதும் கூறாமல் வெளியே சென்றாராம்.

இந்நிலையில் சின்ராஜ் வீட்டில் இருந்து நேற்று நள்ளிரவு திடீரென்று துர்நாற்றம் வீசியது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனே விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பாண்டியம்மாள், அவரது மகள்கள் பரிமளா, பவித்ரா, சினேகா ஆகிய 4 பேரும் இறந்துகிடந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த 4  பேரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே சீனிராஜை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் மகள்களை சீனிராஜ் கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அங்க அடிச்சா இங்க வலிக்கும் - கருணாநிதிக்கு திகில் காட்டிய பாஜக அரசு