Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வருகிறது 4.20 லட்சம் தடுப்பூசிகள்! தீர்ந்தது பிரச்சனை!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:30 IST)
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் வரும் 3ஆன் தேதியிலிருந்து 6 ஆம் தேதி வரை தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை 4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருவதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
தமிழகத்துக்கு ஏற்கனவே மே மாதம் தர வேண்டிய தடுப்பூசிகளைக் மத்திய அரசு இன்னும் தரவில்லை என்றும், ஜூன் மாதத்திற்கு உரிய தடுப்பு ஊசிகளும் வரவில்லை என்றும் தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகிய இருவரும் மாறிமாறி குற்றம்சாட்டியதையடுத்து மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது 
 
அது மட்டுமின்றி தடுப்பூசி தராத மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் எதிராக டுவிட்டரில் ஹாஷ்டாக் ஒன்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இதனை அடுத்து சற்றுமுன் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி விட்டதாகவும் 4.2 லட்சம் தடுப்பு ஊசி இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சென்னைக்கு வர உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி பற்றாக்குறைப் பிரச்சனை இருந்ததாக கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments