Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு 377 ஆசிரியர்கள் தேர்வு

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (18:07 IST)
இந்த ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு 377 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
 
2015 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு 377 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடக்கப்பள்ளியில் 201 ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 13 பேரும் மெட்ரிக் பள்ளிகளில் 30 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 2 பேரும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கும் விழா வருகின்ற இம்மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினந்தன்று நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அமைச்சர் வீரமணி பங்கேற்கின்றனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments