Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, கோவை உள்பட 37 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: 3வது அலை ஆரம்பமா?

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (07:41 IST)
இந்தியா முழுவதும் 37 மாவட்டங்கள் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து மூன்றாவது அலை வந்து விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது தற்பொழுதுதான் இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபரில் உச்சம் அடையும் என்று மருத்துவ வல்லுநர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர் 
 
அதன்படி தற்போது மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதைகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை சென்னை கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் படிப்படியாக மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே அதிகரித்துவரும் 37 மாவட்டங்களில் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனா அதிகரித்துவரும் 37 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments