Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தியின் 3500 கிமீ நடைப்பயணம்: சென்னையில் முக்கிய ஆலோசனை!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (15:05 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல திட்டமிட்ட நிலையில் இந்த நடைப் பயணத்திற்கானஆலோசனை சென்னையில் நடத்தப்பட்டுள்ளது 
 
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்
 
செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்க உள்ள இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் ஆரம்பித்து நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக கேரளா செல்கிறது. இதனையடுத்து நாடு முழுவதும் இந்த நடை பயணம் தொடர்கிறது
 
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த நடைப்பயணம் ஆரம்பமாக உள்ளதை அடுத்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர். நடை பயணத்திற்கு முன்னேற்பாடு, பாதுகாப்பு ஆகியவை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்பட நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments