Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயம்

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயம்
, செவ்வாய், 1 டிசம்பர் 2015 (12:38 IST)
காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு அருகே குருவன்மேடு பகுதியில் தனியார் தொழிற்சாலையை சேர்ந்த பேருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 35 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil