Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் 31 பேருக்கு கொரோனா – அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Webdunia
சனி, 30 மே 2020 (10:41 IST)
சென்னை புழல் சிறையில் 93 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 800 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகளில் சிலர் பயிற்சியை முடித்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த சிறைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் புழல் சிறையில் இருந்து கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் புழல் சிறையில் இருந்து சென்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களிடம் பழகிய 74 கைதிகள், 19 காவலர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன, அதில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து 31 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தேவையான மருத்துவ வசதிகள் அளித்து வருவதாகவும் புழல் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியானது கைதிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments