Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் 31 பேருக்கு கொரோனா – அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Webdunia
சனி, 30 மே 2020 (10:41 IST)
சென்னை புழல் சிறையில் 93 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 800 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகளில் சிலர் பயிற்சியை முடித்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த சிறைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் புழல் சிறையில் இருந்து கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் புழல் சிறையில் இருந்து சென்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களிடம் பழகிய 74 கைதிகள், 19 காவலர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன, அதில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து 31 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தேவையான மருத்துவ வசதிகள் அளித்து வருவதாகவும் புழல் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியானது கைதிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments