30 டிஎம்சி தண்ணீர் தேவை - தமிழக அரசு அறிக்கை தாக்கல்
, சனி, 1 டிசம்பர் 2012 (15:27 IST)
''15
நாட்களில் 30 டிஎம்சி தண்ணீரை தரவேண்டும்'' என்று தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடும் விவகாரத்தில் இருமாநில முதலமைச்சர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 26ம் தேதி தெரிவித்தது.இதனையடுத்து, கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிகே.ஜெயின், மதன் பி லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு மாநில முதல்வர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார்.தமிழகத்தில் சம்பா பயிர்களை காப்பாற்ற 39 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும், டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை குறைந்தபட்சம் 30 டிஎம்சி தண்ணீர் அளிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.கர்நாடகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு 78 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாக கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தமிழக அரசும், கர்நாடக அரசும், தங்களுக்கான தண்ணீர் தேவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டதையடுத்து இன்று தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.அதில், பதினைந்து நாட்களில் 30 டிஎம்சி தண்ணீரை தரவேண்டும் அறிக்கையில் தமிழக அரசு வலியுறுத்தியள்ளது.