Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை வாயில் கடித்துத் துப்பிய 3 இளைஞர்கள் கைது

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (16:07 IST)
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பாம்பை வாயில் கடித்துத் துப்பிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள சின்னகைனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன், சூர்யா, சந்தோஷ் ஆகிய மூவரும் கடந்த மாதம் 15 ஆம் தேதி அவர்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் ஒரு தண்ணீர்ப்பாம்பை பிடித்துள்ளனர்.

இதையடுத்து, அந்தப் பாம்பை கொடுமைப்படுத்தி, அதை வாயில் வைத்து கடித்து இருதுண்டாக்கினர்.

அதை வீடியோ எடுத்ததுடன்  இந்த வீடியோவை அவர்கள்  சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ பரவலான நிலையில், செனி வனத்துறை அலுவலகத்தின் சைபர் கிரைம் கண்ட்ரோல் பிரிவினர் ஆற்காடு வனச்சரகர் சரவணபாபுவுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, பாம்புவை கடித்துக் கொன்ற இளைஞர்கள் மூவர் மீதும் 4 பிரவுகளின் வழக்குப் பதிவு செய்து, ஆற்காடு வனச்சரக போலீஸார் கைது செய்தனர். அதன்பின்னர், அவர்களை  ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments