போலீஸ் ஸ்டேஷன் முன்னாலேயேவா இப்படி பன்னுவாங்க??

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (19:08 IST)
தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன் முன்பு, போலீஸாரையே கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ எடுத்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்தவர்கள் ரிஷிகேஷ், ஆதிகேசவன், மற்றும் ஒரு 15 வயது வாலிபர். அடிதடி வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த இந்த மூவரும், நேற்று அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்.

அப்போது போலீஸ் ஸ்டேஷன் முன்பு மூன்று பேரும் சேர்ந்து போலீஸாரை கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ ஒன்றை எடுத்தனர். இதனைப் பார்த்து பெருங்கோபம் அடைந்த போலீஸார் ஒருவர் அந்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதன் பின்னர் ரிஷிகேஷ் மற்றும் ஆதிகேசவனை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் இருந்த 15 வயது சிறுவனை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை.. மொத்த மதிப்பு ரூ.9.5 கோடி..!

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments