Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது சிறுமியின் உயிரை காவு வாங்கிய பள்ளி வாகனம்: சோகத்தில் கிராமம்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (12:28 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள சிங்கராயபுரத்தை சேர்ந்த 3 வயது சிறுமி கவிநிலா பள்ளி வாகனம் மோதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இந்த அகால மரணத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


 
 
சிங்கராயபுரத்தை சேர்ந்த பார்த்திபன் என்பரின் மகள் கவிநிலா. இவர் தனது மகளை எஸ்.எம்.எச்.எஸ் என்ற தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்த்திருந்தார். பள்ளி முடிந்து மாலை பள்ளி வாகனத்தில் வீடு திரும்பிய கவிநிலா, வீட்டின் வாசல் அருகே இறங்கி, வேனின் முன்புறமாக சென்று சாலையை கடக்க முயன்றுள்ளார்.
 
அப்போது, வேன் ஓட்டுநர் சிறுமி சாலையை கடப்பதை பார்க்காமல் வேனை எடுத்து சிறுமி மீது மோதியதில் சக்கரம் ஏறி சிறுமி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
சிறுமியின் மீது வேனை ஏற்றி கொன்றதால் தப்பித்த ஓட முயன்ற ஓட்டுனரை கிராம மக்கள் நையப்புடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் ஓட்டுநரின் அலட்சியத்தால் 3 வயது சிறுமியின் உயிர் பரிதாபமாக பலியாகியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அடுத்த கட்டுரையில்
Show comments