Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோப்ப நாய்க்கு வைத்திருந்த கஞ்சாவை எடுத்து குதூகலம்! – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (10:39 IST)
புதுக்கோட்டையில் மோப்ப நாய் பயிற்சிக்கு வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை திருடி புகைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் மோப்ப நாய் பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு மோப்ப நாய்களை பராமரிக்க தனியாக போலீஸ்காரர்கள் உள்ளனர்.

மோப்ப நாய்களுக்கு மோப்ப பயிற்சி அளிப்பதற்காக காவல் அலுவலகத்தில் கஞ்சா வைக்கப்பட்டிருந்துள்ளது. அப்பிரிவில் பணியாற்றி வந்த சேவியர் ஜான்சன், பழனிசாமி மற்றும் அஸ்வித் ஆகிய மூன்று காவலர்கள் அந்த கஞ்சாவிலிருந்து அடிக்கடி கொஞ்சமாக எடுத்து புகைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கஞ்சா இருப்பை ஆய்வு செய்தபோது அது குறைந்திருந்ததால் மேலதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் இந்த மூன்று காவலர்களும் கஞ்சாவை திருடி புகைத்தது தெரிய வந்த நிலையில் அவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments