நாகை மாவட்டத்தில் சிறுவனுக்கு மது கொடுத்து நடனமாட வைத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் சிறுவனுக்கு மது கொடுத்து நடனமாட செய்துள்ளனர். இதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு புகார் சென்றுள்ளது.
அதன்பேரில் காவல்துறையினர் சிறுவனுக்கு மது கொடுத்த தினேஷ், அரவிந்தன் மற்றும் மதுபாலா ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் சமூக வலைதளத்தில் முன்பு சிறுவன் ஒருவனுக்கு மது கொடுப்பது போல் புகைப்படம் வெளியாகி வைரலானது.
இதேபோல் ஆங்காங்கே சிறுவர்களுக்கு மது பழக்கத்தை ஏற்படுத்துபவர்கள் இருந்து வருகின்றனர்.