Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசியமாக வீடியோ எடுத்த நபர் – பெண்களுக்கு உதவுவது போல நடித்து ஏமாற்றிய கொடூரன்

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:00 IST)
கோவையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெண்கள் துணி மாற்றுவதை வீடியோ எடுத்த மற்றும் அதை பரப்பிய 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள பிரபல பெட்ரோல் பங்கில்  ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்களும் வேலைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் இருந்து வரும் பெண்கள் தங்கள் சீருடைகளை  மாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் ரகசியமாக தனது மொபைல் கேமராவை பொறுத்தி வீடியோ எடுத்துள்ளார் சக ஆண் ஊழியரான சுபாஷ்.

இதையறிந்த அந்த பெண்கள் இதுகுறித்து நிறுவனத்திடம் புகார் கொடுக்க சுபாஷிடம் இருந்த வீடியோக்களை வாங்கி அதை அழித்துள்ளார் மணிகண்டன். அதன் பின் சுபாஷை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 6 மாதம் முடிந்த நிலையில் தற்போது சுபாஷ் எடுத்த வீடியோக்கள் சமூக இணையதளத்தில் பரவ சம்மந்தப்பட்ட பெண்கள் அதிர்ச்சியாகி சைபர் கிரைம் போலிஸில் புகாரளித்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் சுபாஷ் அந்த வீடியோக்களை பரப்பவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் நடத்திய விசாரணையில் சுபாஷிடம் இருந்து வீடியோக்களை வாங்கி அழித்ததாக சொன்ன மணிகண்டன், அவற்றை செல்போனில் சேமித்து வைத்துள்ளார்.  பின்னர் தனது நண்பர் ஒருவருக்கு அனுப்ப, அவர் மூலமாக இணையதளத்தில் வீடியோ பரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments