Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவில் இணையும் மதிமுகவின் தென் மாவட்ட செயலாளர்கள்? வைகோ கலக்கம்

மூன்று தென் மாவட்ட செயலாளர்கள் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்

திமுகவில் இணையும் மதிமுகவின் தென் மாவட்ட செயலாளர்கள்? வைகோ கலக்கம்
, திங்கள், 14 டிசம்பர் 2015 (15:08 IST)
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டத்தின் செயலாளர்கள் மதிமுகவில் இருந்து விலகி இன்று மாலை திமுக வில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லைசெல்வம் ஆகிய மூவரும் இன்று மாலை 6 மணிக்கு கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணையப் போவதாக கூறப்படுகிறது.
 
பல்வேறு மாவட்டங்களிலிருந்து மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர், சில மாதங்களுக்கு முன்பு விலகி திமுகவில் தங்களை இணைத்து கொண்டு கட்சி பணியாற்றி வருகின்றனர்.
 
இந்த நிலையில், வைகோ மீது ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து தென் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக திமுக கட்சி வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகியது.
 
இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்ட மதிமுக செயலாளர்கள் தனது ஆதரவுளார்களுடன் நேற்று சென்னை புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil