Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேயருக்கு எதிராக போராட்டம் நடத்திய 3 திமுக கவுன்சிலர்கள்: துரைமுருகன் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:49 IST)
நெல்லை மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

நெல்லை மாநகராட்சியில் ஆளும் திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் அடிக்கடி  மாமன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது, ஊழல் குற்றச்சாட்டை முன் வைப்பதும் ஆக இருந்தனர்.

இதனால்  சில திமுக கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் மேயருக்கு எதிராக போராட்டம் நடத்திய மூன்று கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர் மற்றும் மாநகர பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்,

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments