கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்ற 3 பேர் பலி

கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்ற 3 பேர் பலி

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (12:31 IST)
கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்ற 3 பேர் விஷவாயு தாக்கி பலியாகி உள்ளனர்.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகர் மாவட்டத்தில் உள்ள கடம்ப்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் யாதவ்(45) என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடு கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்தது. வெளியே வர முடியாமல் கத்திய ஆட்டை காப்பாற்ற சுரேஷ் யாதவின் மருமகனான சிவம்(17) என்பவர் கிணற்றுக்குள் குதித்தார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் பதற்றம் அடைந்த சுரேஷ் யாதவ் கிணற்றுக்குள் குதித்தார்.

கிணற்றுக்குள் அவர்கள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்ட சுரேஷ் யாதவின் தம்பி ராஜேஷ்(40) என்பவர் அவர்களை மீட்பதற்காக கிணற்றுக்குள் குதித்தார். கிணற்றுக்குள் குதித்த மூவரும் கிணற்றிலேயே மரணமடைந்தனர். பயன்பாடின்றி பாழ்பட்டுப் போய் கிடந்த அந்த கிணற்றுக்குள் இருந்து கிளம்பிய வீரியமான விஷவாயுவை சுவாசித்ததால் தான் அவர்கள் மூவர் இறந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு பின் ஓட்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?!... வாங்க பார்ப்போம்..

ஓசூரில் காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு..!

வெள்ளை மாளிகையில் டிரம்ப் வைத்த கிறிஸ்துமஸ் விருந்து.. ’தசாவதாரம் பட நடிகை பங்கேற்பு..!

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல்.. கொளத்தூரில் 1 லட்சம்.. சேப்பாக்கத்தில் 89 ஆயிரம் பெயர்கள் நீக்கம்..!

வங்கதேசம் போல் தான் மேற்குவங்கமும் உள்ளது.. சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments