Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மறைவு எதிரொலி: பள்ளி, கல்லுரிகளுக்கு 3 நாள் விடுமுறை

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (00:35 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


 

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து கடந்த 19ஆம் தேதி அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நேற்று முன்தினம் [ஞாயிற்றுக்கிழமை] மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவர் சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு மூன்று நாட்கள் [செவ்வாய்கிழமை, புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை] விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் குற்றவாளி தான்; தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு..!

கைது செய்யாம இருக்க பணம் குடுங்க! ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் ரூ.50 லட்சம் வாங்கிய போலீஸ்!? - பகீர் குற்றச்சாட்டு!

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!

முதல்வர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம்? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

எந்த வேலையையும் நிறுத்தக் கூடாது! அப்பல்லோவில் இருந்தபடியே ஆலோசனை செய்யும் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments