பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க., அஇஅதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், தி.மு.க., அஇஅதிமுக உறுப்பினர்கள் 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் விவாதம் நடத்த மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க., அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் வெளிநடப்பு செய்தனர்.