Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பேரின் உயிரையும் ஜெயலலிதா காப்பாற்றுவார்: பேரறிவாளன் தந்தை நம்பிக்கை

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2011 (18:44 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரது உயிர்களையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காப்பாற்றுவார் என்று பேரறிவாளன் தந்தை நம்பிக்கை குயில்தாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து குயில்தாசன் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது மகன் உள்பட 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாள் அறிவித்துள்ள தகவலை கேட்டு மிகவும் வேதனையுடன் உள்ளேன்.அனைத்து கட்சி தலைவர்களும், மனித நேயம் உள்ளவர்களும், தமிழ் இன உணர்வு உள்ளவர்களும், மாணவர்களும், இளைஞர்களும் அனைவரும் ஒன்று திரண்டு ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனர்.

விரைவில் ஆலோசனையில் நல்ல முடிவு எடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு அளிக்க உள்ளனர். எனக்கு தமிழக முதலமைச்சர் மீது நம்பிக்கை உள்ளது.3 பேர் உயிர்களை அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments