28 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை இன்று சந்திக்கிறார் விஜயகாந்த் - தமிழக அரசியலில் பரபரப்பு!
, சனி, 3 டிசம்பர் 2011 (09:28 IST)
தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 28 பேருடன் அக்கட்சி தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து பேசுகிறார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சியை ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் புறக்கணித்ததால் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது.இதனால் அ.தி.மு.க. கூட்டணி உடைந்தது. இந்த நிலையில் பால் விலை உயர்வு, கட்டண உயர்வு உள்ளிட்ட அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து விஜயகாந்த் அண்மையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.அப்போது, அ.தி.மு.க. அரசை, குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார் விஜயகாந்த். மேலும், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அ.தி.மு.க. பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாகவும் அவர் குற்றம்சாற்றியதோடு, எனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமானால் இழுத்துக் கொள்ளட்டும், மக்களிடம் இருந்து என்னை பிரித்து விடமுடியாது என்று சவால் விடுத்தார்.இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று காலை 10 மணிக்கு தே.மு.தி.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், கட்சியின் 28 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து பேசுகிறார்.ஈளுநர் உடனான சந்திப்பின்போது தனது கட்சியின் 28 சட்டமன்ற உறுப்பினர்களுடம் தன்னுடன் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க இருக்கிறார் என்றும் பேசப்படுகிறது.ஆனால், சட்டமன்ற தேர்தலில் தனது தயவு இல்லாமல் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்க முடியாது என்று விஜயகாந்த் பேசியதும், ஆட்சியை கலைத்து விட்டு ஓராண்டு ளுநர் ஆட்சிக்கு பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது, இவற்றைத் தொடர்ந்து ஆளுநரை அவர் சந்தித்து பேசுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மொத்ததில் விஜயகாந்த், ஆளுநர் சந்திப்புக்கு பிறகே அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.