Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம்.. என்ன காரணம்?

Mahendran
சனி, 16 மார்ச் 2024 (13:56 IST)
தமிழகம் முழுவதும் சில வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் 27 வேட்பாளர்கள் தகுதி இயக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு சிலர் இன்னும் தேர்தல் செலவு கணக்கு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில்குமார் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சட்டப்பேரவையில் தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments