Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக ஆர்ப்பாட்டம்.. மீதமான உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:55 IST)
தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேமுதிக ஆர்ப்பாட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு  தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உணவை அந்த பகுதியில் உள்ளது மக்கள் சாப்பிட்டனர்  
 
இந்த உணவை முத்துகிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வழங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் மீதம் இருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது அடுத்து 25 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments