''
பா.ம.க. பொதுக்குழு கூட்டம் வரும் 25ஆம் தேதி கூடுகிறது'' என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பா.ம.க. தலைமைப் பொதுக்குழு கூட்டம் வரும் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இப்பொதுக்குழு நடக்கிறது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர், இளைஞர் சங்க தலைவர் அன்புமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில துணைப் பொதுச் செயலர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் இந்த பொதுக் குழுவில் ஆலோசிக்கப்படுகிறது'' என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.