மதுரையில் வங்கிக் கொள்ளையில் தேடப்பட்டு வந்த கொள்ளையரை 24 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரில் இருந்த பேங்க் ஆப் மதுரை வங்கியில் 1988ஆம் ஆண்டு கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் 20 கிலோ தங்கம், 38 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது.
இந்த கொள்ளை வழக்கில் 21 சேர்க்கப்பட்டனர். ஆனால் 16 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மதுரை நீதிமன்றம், கடந்த 2004ஆம் ஆண்டு 15 பேருக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான இளங்கோவை கிருஷ்ணகிரியில் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் கொள்ளையன் இளங்கோவன் போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.