Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (18:38 IST)
சமீபத்தில் வீசிய டவ்தேவ் புயலால் காணாமல் போன 21 மீனவர்களை குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் வீசிய டவ்தேவ் புயலின்போது கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை 
 
இந்த நிலையில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 21 மீனவர்களையும் குடும்பத்திற்கு தலா ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவி அந்த குடும்பத்தினர்களுக்கு ஓரளவு ஆறுதலை அளித்தாலும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க மேலும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

என்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது: முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments