Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாரிகள் தகவல்

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (11:30 IST)
2021 ஆம் ஆண்டில் இதுவரை 21 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை காரணமாக கொண்டு 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணம் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 
இதுகுறித்து தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னதாகவே, குழந்தை திருமணங்கள் நடத்துவது சட்டப்படி பெரும் குற்றம். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், அதை ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 
 
இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 64 குழந்தை திருமணங்களை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் நடப்பு, 2021 ஆம் ஆண்டில் இதுவரை 21 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments