2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. முழு விவரங்கள்..!

Siva
திங்கள், 14 அக்டோபர் 2024 (09:27 IST)
2024-2025 காலனி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பத்தாம் வகுப்புக்கு மார்ச் 28ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்க உள்ளது என்பதும், அன்றைய தினம் தமிழ் மற்றும் இதர மொழி பாடங்கள் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஏப்ரல் 2ஆம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 4ஆம் தேதி ஆப்ஷனல் மொழி தேர்வு, ஏப்ரல் 7ஆம் தேதி கணிதம், ஏப்ரல் 11ஆம் தேதி அறிவியல், மற்றும் ஏப்ரல் 15ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு காலை 10 மணி முதல் 1.15 மணி வரை நடைபெறும் என்றும், முதல் 10 நிமிடங்கள் கேள்வித் தாள் வாசிப்பதற்கும், அதன் பிறகு 5 நிமிடங்கள் வெரிபிகேஷன் ப்ராசஸ் மற்றும் 10.15 முதல் 1.15 வரை விடை எழுத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல், பதினொன்றாம் வகுப்புக்கு மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், பன்னிரண்டாம் வகுப்புக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது."


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments