Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபையில் டிடிவி தினகரன் - முதல் கூட்டம் தொடங்கியது

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (10:13 IST)
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் தற்போது தொடங்கியதுள்ளது.

 
2018ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.45 மணியளவில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டசபைக்கு வந்தார்.
 
ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் முதல் முறையாக இன்று சட்டசபை கூட்டத்திற்கு வந்தார். அவருக்கு 148வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. முதன் முறையாக சட்டசபைக்கு வந்த தினகரனுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் நேரு, பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
 
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச தொடங்கியதுமே, எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன்பின் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநர் உரையை புறக்கணித்தனர்.
 
ஆளுநர் பேசி முடித்ததும், எம்.எல்.ஏக்கள் மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுயேட்சை எம்.எல்.ஏ.வான தினகரனுக்கு வருகிற 10ம் தேதி பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments