Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (20:45 IST)
கரூரில் 8 - வயது சிறுவனை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய  வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ள கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நீதிபதி நசீமாபானு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
 
கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் வசித்து வரும் கட்டடத் தொழில் முருகேசன். இவருக்கு திருமணம் ஆகவில்லை.  இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுவனிடம் செல்போனில் விளையாட்டு மொம்மை படம் காட்டி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
இது தொடர்பாக கடந்த 20- 03- 22- ஆம் தேதி முருகேசன் கைது செய்யப்பட்டார்.   கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நீதிபதி நசீமாபானு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கினார்.
 
குற்றவாளி முருகேசனுக்கு  20 ஆண்டுகள் சிறை  தண்டனை விதித்தும் ரூ. 3000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 
மேலும்,  பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்