Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கலைக்கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்கள்: அரசு அனுமதி

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (08:13 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
சமீபத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் சேர்க்கப்பட்டனர் என்பதும், ஆன்லைன் மூலமே சான்றிதழ் பதிவேற்றம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர்களை சேர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் அதிக அளவில் மாணவர்கள் கல்லூரியில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளதை அடுத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களின் அனுமதி பெறவும் கல்லூரி நிர்வாகத்திற்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதைவிட கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கே பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments