Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்திவரதர் தரிசனத்தில் மின்சாரம் தாக்கியது – பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (18:08 IST)
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனத்தில் பக்தர்களை மின்சாரம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க பொது வரிசையும், விஐபிக்களுக்கான சிறப்பு வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று விஐபி வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் சிலர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். மின்சாரத்தால் தாக்கப்பட்டவர்களில் போலீஸும், தீயணைப்பு துறையினரும் அடங்குவர். 20 பேர் மேல் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் பாதுகாப்பு வசதியை மேம்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments