Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"உள்குத்து வில்லன்களுக்கு கல்தா" - திமுக தலைமை அதிரடி முடிவு

"உள்குத்து வில்லன்களுக்கு கல்தா" - திமுக தலைமை அதிரடி முடிவு

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (12:43 IST)
தேர்தலில், திமுக வேட்பாளர்கள் தோல்விக்கு காரணமாக, 20 மாவட்ட நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
 

 
சட்டமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும், 89 இடங்களில் மட்டுமே திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்கு, கட்சிக்குள் நடந்த உள்குத்து வேலைகள்தான் காரணம் என்றும் தோல்வி அடைந்தவர்கள் தலைமைக்கு கண்ணீர் கடிதம் எழுதினர். நேரிலும் வந்து கருணாநிதியிடம் புகார் தெரிவித்தனர்.
 
இதனால், திமுக வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு, தோல்வி அடையச் செய்த நிர்வாகிகளை திமுக தலைமை களையெடுத்து வருகிறது.
 
இதன் முதல்கட்டமாக,  நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.கி.துரைராஜ், கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.வீரகோபால், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செ.காந்தி செல்வன் ஆகியோர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
 
இதே போல, திமுக வேட்பாளர்கள் தோல்விக்கு காரணமாக இருந்த, மேலும், 20 மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை அதிரடி முடிவு செய்துள்ளது. இதற்கான லிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து உள்குத்து வில்லன்கள் அலறிப் போய் உள்ளனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments