Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் குழந்தையை கூவிக் கூவி விற்ற பெண்கள்

பெண் குழந்தையை கூவிக் கூவி விற்ற பெண்கள்
, வியாழன், 14 ஜூலை 2016 (11:13 IST)
ரயிலில் பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற இரண்டு பெண்களை காவல் துறையினரிடம் சிக்கினர்.


 

 
ஈரோட்டில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் பயணிகள் ரயிலில், இரண்டு பெண்கள் கைக்குழந்தையுடன் பயணித்துள்ளனர். அப்போது, சக பயணிகளிடம் யாருக்காவது குழந்தை வேண்டுமா என கேட்டு, குழந்தையை விற்க முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள், குழந்தை உதவி மையத்துக்கு இது பற்றி புகார் அளித்திருக்கின்றனர். பயணிகளின் புகாரின் அடிப்படையில், கோவை ரயில் நிலையத்தில் அந்த இரண்டு பெண்களையும் குழந்தையுடன் கோவை ரயில்வே காவல் துறையினர் பிடித்தனர். 
 
விசாரணையில், இரண்டு பெண்களில் ஒருவர் குழந்தையின்மையால், பெண் குழந்தை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். குழந்தை வாங்குவதில் சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படாததால், சிக்கல் வரும் என கருதி மீண்டும் அந்த குழந்தையை ஒப்படைக்க சென்றபோது, யாரிடமாவது விற்றுவிடலாம் என்று முடிவு செய்ததாக, காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கயெல்லாம் பத்திரிகையாளரா த்தூ....: விளக்கம் அளிக்க விஜயகாந்துக்கு உத்தரவு