Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது
, வியாழன், 7 மே 2015 (08:25 IST)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்தது.
 
இந்த தேர்வை  8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வுமுடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. 
 
மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
 

தேர்வு முடிவுகளை கீழ்கண்ட வலைதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்:-

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in 
 
அத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட  ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
 
மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil