Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேனக்கல் அருகே பரிசல் படகு கவிழந்து விபத்து - 2 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (19:48 IST)
தர்மபுரி மாவட்டம் மணல்மேடு பகுதியில் பரிசல் படகு கவிழ்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

 
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆற்றின் அருகே மணல்மேடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பரிசல் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 9 பேரில் 2 பேரின் உடலை தர்மபுரி மாவட்ட தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.
 
மீதமுள்ள 7 பேரின் உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து திடீரென மணல்மேடு பகுதியில் ஆற்றின் வேகம் அதிகரித்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக  அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சென்னை தியாகராய நகரை சேர்ந்த 9 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் பரிசலில் பயணம் செய்யும் பொழுது தற்காப்பு உடுப்பை பயண்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த உறவினர்கள் ஒகேனக்கலுக்கு சென்றுள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments