Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கோடி மதிப்புள்ள செல்போன்கள் அபேஸ் – நூதனமாக நடத்திய கொள்ளை!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:46 IST)
சென்னையில் இருந்து மும்பைக்கு எடுத்து செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள சியோமி செல்பொன் தொழிற்சாலையில் இருந்து மும்பைக்கு செல்போன்கள் கண்டெய்னரில் ஏற்றி அனுப்பப்பட்டன. அந்த கண்டெய்னர் லாரியை இர்பான் என்ற உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஓட்டிச் சென்றுள்ளார். ஆந்திரா - தமிழ்நாடு எல்லையான சித்தூர் அருகே, சென்று கொண்டிருந்த போது மற்றொரு லாரியில் வந்த கும்பல் இர்பானைத் தாக்கிவிட்டு செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில் நாராயணவனம் மற்றும் புத்தூர் கொள்ளையடித்துச் சென்ற லாரி கிடைத்துள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்ட செல்போன்கள் அப்படியே இருந்துள்ளன. இதையடுத்து போலிஸார் அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுநர் இர்பான் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments