Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேதியியல் தேர்விற்கு கருணை மதிப்பெண் 6: பள்ளிக்கல்வித்துறை முடிவு

வேதியியல் தேர்விற்கு கருணை மதிப்பெண்

வேதியியல் தேர்விற்கு கருணை மதிப்பெண் 6: பள்ளிக்கல்வித்துறை முடிவு
, செவ்வாய், 22 மார்ச் 2016 (10:48 IST)
பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்துள்ளவர்களுக்கு கருணை மதிப்பெண் 6 வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


 

 
தொழில் கல்வியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு பிளஸ்-2 வேதியியல் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 
பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள் குழப்பத்தை விளைவித்ததாக கூறி மாணவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். இதனால்,தேர்வை சரியாக எழுதாத சிலர் தற்கொலை செய்துகொண்டனர்.
 
இந்நிலையில், வேதியியல் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர்.
 
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிளஸ்-2 வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 17 ஆவது வினா சரியாக கேட்கப்படவில்லை.
 
மேலும் 5 மதிப்பெண் கேள்வியில் 70 ஆம் எண் கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருந்தது. கேள்வியில் 11 என்று இருப்பதற்கு பதிலாக ரோமன் எழுத்தில் கேட்கப்பட்டு இருந்தது.
 
ரோமன் எழுத்தில் இரண்டு என்றால் அது கால்சியத்தை குறிக்கும். ரோமன் எழுத்து அல்லாமல் 11 என்றால் அது காப்பரை குறிக்கும்.
 
இந்த இரு வினாக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் 1 + 5 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. மொத்தத்தில் 6 மதிப்பெண் வழங்கப்பட இருக்கிறது. இதை கருணை மதிப்பெண் என்றும் கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
 
+2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil