Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கர்ப்பமாக்கிய வயதானவர்கள் 2 பேர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வயதானவர்கள் 2 பேர் கைது

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (03:03 IST)
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் குத்தனூரை சேர்ந்தவர் வாசுதேவன் (56). இவரது நண்பர் ரமேஷ் நாயர் (49). இவர்கள் 2 பேரும் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்துள்ளனர்.


 


இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். 16 வயதே நிரம்பிய சிறுமியை அவர்களது பெற்றோர் பிரசவத்துக்காக ஆலத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் நலம் மிக மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், 16 வயது சிறுமியின் உடல் நலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சிறு வயதில் பிரசவமானது எப்படி என டாக்டர் கேட்டுள்ளார். அப்போது சிறுமி நடந்தவற்றை கூறி அழுதார். சிறுமியின் பெற்றோரும் மகள் கூறியது உண்மைதான் என்று கூறினர். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் இது குறித்து ஆலத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அடுத்து, சிறுமியை கற்பழித்த இருவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments