Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியை கர்ப்பமாக்கிய வயதானவர்கள் 2 பேர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வயதானவர்கள் 2 பேர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய  வயதானவர்கள் 2 பேர் கைது
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (03:03 IST)
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் குத்தனூரை சேர்ந்தவர் வாசுதேவன் (56). இவரது நண்பர் ரமேஷ் நாயர் (49). இவர்கள் 2 பேரும் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்துள்ளனர்.


 


இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். 16 வயதே நிரம்பிய சிறுமியை அவர்களது பெற்றோர் பிரசவத்துக்காக ஆலத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் நலம் மிக மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், 16 வயது சிறுமியின் உடல் நலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சிறு வயதில் பிரசவமானது எப்படி என டாக்டர் கேட்டுள்ளார். அப்போது சிறுமி நடந்தவற்றை கூறி அழுதார். சிறுமியின் பெற்றோரும் மகள் கூறியது உண்மைதான் என்று கூறினர். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் இது குறித்து ஆலத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அடுத்து, சிறுமியை கற்பழித்த இருவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பயங்கரம்’ - சிறைச்சாலையில் குண்டுவெடிப்பு 10 கைதிகள் பலி