Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசியாவில் இருந்து 2.30 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 4 பெண்கள்

மலேசியாவில் இருந்து 2.30 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 4 பெண்கள்
, ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (19:58 IST)
மலேசியா, ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடமிருந்து 2.30 கிலோ தங்கத்தை விமான நிலைய அதிகரிகள் பறிமுதல் செய்தனர்.
 
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிகாலையில் ஏர் ஏசியா விமானம், மலேசியாவில் இருந்து வந்தது.வழக்கம் போல் விமான நிலைய சுங்கத்துறை அதிகரிகள்  ஏர் ஏசியா விமானத்தில் இருந்த  பயணிகளை சோதணை செய்தனர். 
 
இச்சோதணையின் போது 4 பெண்களின் உடமைகள் சந்தேகம்படும்படி இருந்தது. பின்னர் அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது . 2.3 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
மேலும், 4 பெண்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  சமீபத்தில் தங்க கடத்தலில் அதிக பெண்கள் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.55 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil