Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளில் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம்

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2012 (15:45 IST)
இன்று இரண்டாவது நாளாக என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது

என்எல்சியில் பணி புரிந்து வரும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ஏஐடியுசி சார்பிலான ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை நேற்று தொடங்கியது.

இதற்கு தொமுச, சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.

இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments